துபாய்: வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது
சனி, ஏப்ரல் 06, 2013
Sandstorms
| எதிர்வினைகள்: |
மறியல் போராட்டம்
திருவாரூர், ஏப்ரல் 06: SDPI கட்சியின் சார்பாக கொரடாச்சேரி யில் பொது மக்களுக்கு இடையூராகவும், பள்ளிகூட மாணவ, மாணவிகளுக்கு இடையூராகவும் மற்றும் ரேஷன் கடை அருகாமையிலும் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி கொரடாச்சேரி SDPI நகர கிளை சார்பாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 45 தேசிய நெடுஞ்சாலை மத்தியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை SDPI திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துல் லத்திப், அவர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஹாஜி முஹம்மத், கோரடா சேரி நகர தலைவர் கர்ணா மற்றும் நகர செயலர் மற்றும் திலீபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி பைசல் அஹ்மத்
| எதிர்வினைகள்: |
வெள்ளி, ஏப்ரல் 05, 2013
பொதக்குடி சந்தன கூடு
பொதக்குடி ஹஜ்ரத் நூர் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில் மின்னொலியில் சந்தன கூடு விழா 29ம் தேதி இரவு நடைபெற்றது
கடந்த 13ம் தேதி சிறிய கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. 20ம் தேதி பிறை 7ல் மாலை பெரிய கொடி ஏற்றப்பட்டது.
இதில் வெளிநாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பொதக்குடி, ஆய்குடி, பூதமங்கலம், லட்சுமாங்குடி, கூத்தாநல்லூர்,அத்திக்கடை மன்னார்குடி, நாகூர், முத்துப்பேட்டை அபிவிர்தீஸ்வரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வரும் 29ம் தேதி பிறை 17ல் இரவு மின்னொலியில் சந்தன கூடு விழாவும், 30ம் தேதி பகல் கூடும் நடைபற்றது. சென்னை அல்நூர் குழுமம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொடி ஏற்று விழாவில் பொதக்குடி ஊரா ட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
| எதிர்வினைகள்: |
ஞாயிறு, மார்ச் 24, 2013
ஹக்கீம் ஷேக்தாவூது காமில் ஒலியுல்லாஹ்
முத்துப்பேட்டை – ஜாம்புவானோடை ஹக்கீம் ஷேக்தாவூது காமில் ஒலியுல்லாஹ் ஆண்டவர் தர்ஹாவின் 711 ம் ஆண்டு மாபெரும் பெரிய கந்தூரி விழா கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி விழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிகழ்ச்சிகளில் தினந்தோறும் மனித நேயத்துடன் பல மாற்று மத பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியான 10 ம் நாள் இரவு 23 ம் தேதி நள்ளிரவு புனித சந்தன கூடு நிகழ்ச்சி வெகு விமர்சையாக துவங்கியது.
| எதிர்வினைகள்: |
செவ்வாய், மார்ச் 19, 2013
வெள்ளி, மார்ச் 15, 2013
கந்தூரி விழா
முத்துப்பேட்டை – ஜாம்புவாவோடை ஷேக் தாவூது ஆண்டவர்
தர்ஹாவின் 711 ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா
13.3.13
மாலை 5 மணிக்கு வெகு விமர்சையாக துவங்கியது.
முன்னதாக, தர்ஹா வளாகத்தில் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி
சாஹிப் தலைமையில் துஆ ஓதப்பட்டு திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
மகேஷ் குமார் புனித பல்லாக்கு ஊர்வலத்தினை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட புனித பல்லாக்கு இரண்டுடன், 8 நாட்டிய குதிரைகள், யானை, ஒட்டகம், இரண்டு கண்ணாடி ரதம், சிறிய கூடுகள் மற்றும் வண்ண விளக்குகளால்
அலங்கார வண்டிகள், பேண்டு வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க புனித கொடி
ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப்பட்டு, கோரையாற்று பாலம் வழியாக ஆசாத் நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் வந்து பின்னர்
புதிய பேருந்து நிலையம் சென்று அதே வழியாக மீண்டும் தர்ஹா சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய
வெளிநாட்டிலிருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் தமிழ்
நாட்டில் பல மாவட்டங்களிலிருந்தும்; மாற்று மத பக்தர்கள்
பல்லாயிரக்கணக்கனோர் கலந்துக்கொண்டனர்.
கந்தூரி
விழா ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாக கமிட்டி செய்து இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை
திருவாரூர் எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில்; முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர் இன்ஸ்பெக்டர்
செங்குட்டுவன் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான
காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன| எதிர்வினைகள்: |
வெள்ளி, மார்ச் 08, 2013
அமீரக அத்திக்கடை அசோசியேஷன்
| எதிர்வினைகள்: |
வெள்ளி, டிசம்பர் 14, 2012
அமீரக அத்திக்கடை அசோஷியேசன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் இங்கு இருக்கும்போதே நாம் பிறந்தமண்ணுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல என்னத்தில் இந்த இயக்கம் இனிதே துவங்கபட்டு உள்ளது நமதூரை சேர்ந்தவர்கள் உடனே கீழே உள்ள இயக்க செயற்க்குழு உறுப்பினரை தொடர்பு கொண்டு நீங்களும் இனைந்து அமைப்பு வழற்ச்சிக்கு
உதவுமாறு அன்புடன் வேண்டிகொள்கிறோம்
இப்படிக்கு
ஒருங்கிணைப்பாளர்கள்
V.A.முகம்மது ஃபாருக் 050-6445345
K.D.சுல்தான் அப்துல் காதர் 055-1123864
| எதிர்வினைகள்: |
வெள்ளி, டிசம்பர் 07, 2012
கொடிகம்பம்...,
| எதிர்வினைகள்: |
ஞாயிறு, டிசம்பர் 02, 2012
aramex
aramex
courier day
06.12.2012
------------------------------------------------------------------------------------------------------------------------
02.12.2012 ஞாயிற்று கிழமை
மாலை 3.00 மணிக்கு
நடை பெற்ற ஐக்கிய அரப்
குடியரசின் 41வது சுதந்திரதின
கொண்ட்டஅணிவகுப்பில்
50க்கும்மேற்பட்டaramex
இருசக்கர வாகணம்
கார் மற்றும்
வேன்கள்கலந்து
கொண்டு சிறப்பித்தது.
லேபிள்கள்:
aramex
| எதிர்வினைகள்: |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





































































































































