புதன், நவம்பர் 08, 2023

திருவாரூர் ரயில் சந்திப்பு

 


தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் ரயில் சந்திப்பு 'அமரித் பாரத்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க  பணிகள் சந்திப்பில் நடைபெற்று வருகிறது. 




ரூபாய் 8 கோடியே 36 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் சந்திப்பின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது.



பயணிகளை ஈர்க்கும் விதமாக  ரயில் சந்திப்பின் முகப்பில் அலங்கார வளைவு,  விசாலமான நுழைவாயில், அனைவரையும் கவரக் கூடிய விதத்தில் இட வசதியுடன் அமையும். மேலும் வாகனங்களை தாராளமாக நிறுத்தும் வாகன காப்பகம்,இடையூறின்றி பாதசாரிகள் நடந்து செல்லும் பாதை, அனைத்து நடைமேடைகளிலும் கூடுதலான இருக்கைகள், குடிநீர் குழாய்கள், பாதுகாப்பான மேற்கூரைகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் போன்றவை பயணிப் போரை கவரக்கூடிய விதத்தில் அமைய உள்ளது.மாற்றுத்திறனாளிகள் முதியோர் போன்றவர்களுக்கு ஏதுவாக சாய்வு தள பாதையும் அமைக்கப்பட உள்ளது. தவிர பார்வையற்றோர் நடந்த செல்ல ஏதுவாக தொடு உணர்  தரைதளம்(tactile flooring) அமையவும் இரண்டு நுழைவாயில்கள் ஏற்படுத்திடவும் உள்ளது. ஏற்கனவே மூன்று நடை மேடைகளிலும் மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.  அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருவாரூரை இணைத்து மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட  இந்திய ரயில்வே துறை, தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட அதிகாரிகள், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்,  அனைத்து கட்சி அரசியல் ஆளுமைகள், பத்திரிகை ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 



செயலர் 

முனைவர் பாஸ்கரன்

திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கம் திருவாரூர்.






ஞாயிறு, அக்டோபர் 22, 2023

தஞ்சை ஆம்னி பஸ் ஸ்டாண்ட்

 தஞ்சையில், ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது


தஞ்சாவூர் நகர் பகுதியில் ஆம்னி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் பிற வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

நகர் பகுதியில் ஆம்னி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அந்த பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது தஞ்சை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சையில், ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது



ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து பஸ் போக்குவரத்தை
 மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சை ஆம்னி பஸ் ஸ்டாண்ட்: அடடே இவ்வளவு வசதி இருக்கா!

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆம்னி பஸ் பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய ஆம்னி பஸ் ஸ்டாண்ட் 5400 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 26 பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம். தரை தளத்தில் பயண அலுவலகம், 9 கடைகள் மற்றும் ஆண், பெண் என தனித்தனியாக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், முதல் தளத்தில் 7 கடைகள், தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.



கார், பைக் நிறுத்துவதற்கு என பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றி வர தார் சாலை வசதியுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.





வெள்ளி, அக்டோபர் 20, 2023

மன்னார்குடி புதிய பேருந்து நிலையம்

மன்னார்குடி   புதிய ருந்து நிலையம்

 கட்டுமாணபனி நடைபெரும்போது 




கழுகு பார்வை .






தற்போது நடைபெற்று வரும் மன்னார்குடி - தஞ்சாவூர் சாலை விரிவாக்கம் பணி



செவ்வாய், அக்டோபர் 17, 2023

மன்னை எக்ஸ்பிரஸ்

 கொரடாச்சேரிஅத்திக்கடை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மன்னையில் இருந்து சென்னை விரைந்துசெல்லும் இரயில் இன்று முதல் தினம் தோறும் நமது கொரடாச்சேரியில் நின்று செல்லும்

 

KORADACHERI   TO   EGMORE (MS)

 Station name (code)

  MANNARGUDI     (MQ                   10:35 pm Departs 

  NIDAMANGALAM     (NMJ)            10:54 pm Departs 

  KORADACHERI     (KDE)                11:05 pm Departs 

 CHENNAI EGMORE     (MS)           05:30am  Arrive     


chennai 

egmore to koradacheri


  1.  
  2. Station name (code) 
  3. CHENNAI EGMORE (MS)     10.55  pm   Departs  
  4. KORADACHERI (KDE)          05.11  am   Arrives
  5. NIDAMANGALAM (NMJ)        05:22  am  Arrives
  6.   MANNARGUDI (MQ             06:20   am   Arrives









              வெள்ளி, பிப்ரவரி 25, 2022

              திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில்புதிதாக அமையவிருக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் முனையகம்

               Glimpses of the upcoming integrated passenger terminal at Tiruchirappalli International Airport

              திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தின் கட்டுமான காட்சிகள்










              வெள்ளி, நவம்பர் 19, 2021

              கோயம்பேடு பேருந்து நிலையத்தை புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் மாற்ற திட்டம்





               கோயம்பேடு பேருந்து நிலையத்தை

              புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் மாற்ற திட்டம்

              2023 ஆம் ஆண்டு மாற்றப்படும்
              சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்து நிலையம் இயங்கி வந்தபோது வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாநகர எல்லையை தாண்டவும், வெளிமாவட்டங்களில் இருந்து மாநகருக்குள் வரும் பேருந்துகள் பிராட்வேயை அடையவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கால விரயம் ஆகி வந்தது.

              இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், கோயம்பேட்டில் 37 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் இப்பேருந்து நிலையத்துக்கு தினமும் 60 ஆயிரம் முதல் 1.5 லட்சம் பேர்கள் வரை வந்து செல்கின்றனர்.

              இந்த நிலையில், சென்னை மாநகரம் விரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டு வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கத்திலும், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திலும் புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
              இவற்றில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

              அதன் பின்னர், தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு பயணிக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்லும்.

              சனி, நவம்பர் 19, 2011

              சில நிழல்படம்






























              தமிழ் 

              எழுத்துக்கள்


              உள்ள ரூபாய்கள்

              மார்டீவ்ஸ்


              சிங்கப்பூர்


              இலங்கை